Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Saturday, 18 February 2012

இந்தியத்தாய்



“ Geeton se teri zulfon ko meera ne sanwara/Gautam ne sada di tujhe Nanak ne pukara/Khusro ne kai rangon se daaman ko nikhara/Har dil mein muhabbat ki ukhuwat ki lagan hai/Ye mera watan mera watan mera watan hai “
“ உன் இதயக்கதவுகளை தன்
 பாடல்கள் மூலம் மீரா அலங்கரித்தாள்
 நானக் உன்னை எவ்வாறு அழைத்தாரோ
 அவ்வாறே கௌதமும் அழைத்தார்
 குஸ்ரோ உன் மகுடத்திற்குப்
 பொலிவைச் சேர்த்தார்
 அன்பும் பரந்த மனப்பான்மையும் இங்கு
 ஒவ்வொரு இதயத்தின் துடிப்பாகவே உள்ளது
 இது என்னுடைய நாடு
 என்னுடைய நாடு,என்னுடைய நாடுதான் “

( 2002-ம் ஆண்டில் குஜராத் கலவரங்களின்போது படுகொலை செய்யப்பட்ட முன்னாள் எம்.பி. இஷான் ஜாஃப்ரியின் கவிதை வரிகள்.
  உருதுவிலிருந்து மொழியாக்கம் : ராஃபியா பாஸ்ரின்)



 

Thursday, 2 February 2012

கல் உடைக்கும் பெண்


 பெண்ணொருத்தி கல்லுடைத்தபடி
 தெருவோரத்தில் அமர்ந்திருக்கிறாள்
 சிவப்புச் சேலை அணிந்தபடி
 அவள் கல்லுடைத்துக்கொண்டிருக்கிறாள்
 எரிக்கும் வெயிலில் அமர்ந்தபடி அவள்
 கல்லுடைத்துக்கொண்டிருக்கிறாள்
 செம்புநிறமானஅந்தப் பெண்
 ல்லுடைத்துக்கொண்டிருக்கிறாள்
 அவளுக்கு து இருபத்தியொன்றிருக்குமா?
 வீட்டில் அவளுக்கு ஏழு குழந்தைகள்
 நாற்பது துக்கும் மேல் தோற்றம் ருகிறாள்
 த்து  டாக்காவுக்காகநாள் முழுக்கஉழைக்கிறாள்
 ஒருத்தருக்கு உணவு வாங்கக்கூடபோதாதகாசு
 ஏழு பேரைத் னியே விட்டு
 அவள் ல்லுடைக்கிறாள்
 தினமும் அவள் ல்லுடைக்கிறாள்.

 அவளுக்குப் க்கத்தில்,குடை நிழலில் அமர்ந்தடி,
 ஆணொருவன் ல்லுடைத்துக்கொண்டிருக்கிறான்
 நாள் முழுக்கக் ல்லுடைத்துக்கொண்டிருக்கிறான்
 நிழலின் கீழிருக்கும் அம்மனிதன்
 ஒரு நாளைக்கு இருபது டாக்கா ம்பாதிக்கிறான்
 ல்லுடைத்தடி
 ல்லுடைக்கும் அம்மனிதன் என்னவு காணுவான்
 குடையின் கீழ் அமர்ந்தடி?

 அந்தப் பெண்,
 ல்லுடைக்கும் அந்தப் பெண் என்னவு காணுவாள்?
 அவளுக்கு ஒரு விருக்கிறது
 குடையொன்று வேண்டுமெனும் வு
 வெய்யிலுக்குக் குடையின் கீழிருந்து ல்லுடைக்கும் வு
அழகான காலையொன்றில் ஆணாகிவிடும் கனவு
 ல்லுடைப்பற்கெனஇரட்டைச் ம்பம் பெறும் வு

 அவது வு அவது வேதான்
 அடுத்தநாள் காலையிலும் அவள்
 பெண்ணாகத்தான் ல்லுடைத்துக்கொண்டிருக்கிறாள்
 குடையில்லை,கிழிந்தகுடைகூடஇல்லை
 சுடுவெய்யிலில் அமர்ந்தடி
 அவள் ல்லுடைத்துக்கொண்டிருக்கிறாள்

 அவள் உடைத்தற்கள் கொண்டு புதியதார்ப் பாதைகளும்
 உயர்ந்தட்டங்களும் எழுந்துவிட்ட
 டைசியாகஅடித்தசூறாவளியில்
 அவது வீட்டின் கூரையும் ந்துவிட்டது
 அவள் குடிசையில் ழை ஊற்றுகிறது
 அவளுக்குத் ன் குடிசைக்கு
 க் கூரை வேயவேண்டும் என்றும் ஒரு விருந்தது

 அவள் வு அவளுக்குக் வேதான்
 காலையில் அவது குடிசை மூழ்கிப் போயிருந்தது
 அவள் து அண்டை வீட்டாரிடம் உரத்துக் த்தினாள்
 உலத்தாரிடம் உரத்துக் த்தினாள்

 எனக்கொரு விருக்கிறது, எனக்கொரு விருக்கிறது
 இன்னும் எனக்குக் குடையில்லை
 இன்னும் எனக்குக் கூரையில்லை

 இங்கே பாருங்கள்,
 அவது அண்டை வீட்டார் சொன்னார்கள்‍ -

 அவது ஏழு குழந்தைகளுக்கும் சி
 அவது லைக்கு எண்ணெய் வேண்டும்
 அவது முகத்துக்கு வுடர் வேண்டும்
 அவள் தினமும் றுத்துக்கொண்டே ருகிறாள்
 அவது கைகள் த்துப் போயிற்று
 அவள் உடைக்கும் ற்களைப்போல் இறுகிப் போயிற்று

 அவது சுத்தியலோடு அவள் தொடர்கிறாள்
 தொடர்ந்து அவள் ல்லுடைத்துக்கொண்டிருக்கிறாள்
 அவள் ஒரு ல்லாகிப் போனாள்

 சூரியனின் வெப்பத்தினால் உடைக்கமுடியாதல்லாக
 அரைவயிற்றுப் சியோடு
 வு காணும் இதத்துடன்

 (ஸ்லீமா ஸ்ரினின்  இது எனது நம் இல்லை’ என்றக் விதைத் தொகுப்பிலிருந்து
 மொழியாக்கம் : முனா ராஜேந்திரன்)

  படம் - வடகிழக்கு தைவானில் அமைந்துள்ள  ஒரு பாறை

Wednesday, 4 January 2012

மழைத் தூரிகை

                                       




                                                                      சுவரில்

                                                                      பசுமை பாசி

                                                                      மழைத் தூரிகை




                                                                     

Saturday, 5 November 2011

நீருதிர்க் காலம்

  மழை பெய்யாத ஒரு மழைக் காலத்தில் ஒரு குளம் பட்ட துன்பங்களை இக்கவிதை சொல்ல முயன்றது.ஆக்கியது அடியேன்தான்!



            நீருதிர்க் காலம்


       இன்று வீழ்வோம் - அறிந்தும்
       இய‌ல்பாய் மொட்டுக‌ள்

       தரையில் கனத்துப் படரும் 
       தாம‌ரை இலைக‌ள்

       ச‌க‌தியில் இரை தேடும்
       மீன்கொத்திக‌ள்,நாரைக‌ள் ...

      ச‌ல‌ன‌ம‌ற்ற‌ நீரைப் ப‌ருக‌ விரும்பி
       தாக‌மாய் திரும்பும் மாடுக‌ள் ...

      ந‌ர‌க‌மாகும் ஒரு குள‌ம்
       ம‌னித‌ன் இறைத்த‌ ம‌றுக‌ணம். 
 நண்பர் அண்ணாமலையானின் கவிதை இது.உங்களுக்கும் இது பிடிக்கும்.


   அணுவைப் பிளந்து
   ஆற்றலை
   அணுகுண்டிற்குள்
   அடைத்தபோதே
   விஞ்ஞானம்
   சிறுமையாகிவிட்டது.