மழை பெய்யாத ஒரு மழைக் காலத்தில் ஒரு குளம் பட்ட துன்பங்களை இக்கவிதை சொல்ல முயன்றது.ஆக்கியது அடியேன்தான்!
நீருதிர்க் காலம்
இன்று வீழ்வோம் - அறிந்தும்
இயல்பாய் மொட்டுகள்
தரையில் கனத்துப் படரும்
தாமரை இலைகள்
சகதியில் இரை தேடும்
மீன்கொத்திகள்,நாரைகள் ...
சலனமற்ற நீரைப் பருக விரும்பி
தாகமாய் திரும்பும் மாடுகள் ...
நரகமாகும் ஒரு குளம்
மனிதன் இறைத்த மறுகணம்.
நீருதிர்க் காலம்
இன்று வீழ்வோம் - அறிந்தும்
இயல்பாய் மொட்டுகள்
தரையில் கனத்துப் படரும்
தாமரை இலைகள்
சகதியில் இரை தேடும்
மீன்கொத்திகள்,நாரைகள் ...
சலனமற்ற நீரைப் பருக விரும்பி
தாகமாய் திரும்பும் மாடுகள் ...
நரகமாகும் ஒரு குளம்
மனிதன் இறைத்த மறுகணம்.
மிகத் தாமதமாகத்தான் படித்தேன் சண்முகம்.
ReplyDeleteநீருதிர்க் காலம் ஒரு கண்ணீருதிரும் கவிதை.
வாழ்த்துக்கள்.